திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் 04.12.2025 அன்று நடை பெற்ற தமிழ்நாடு அரசு 66 ஆவது மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டியில் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அணி மூன்றாமிடம் பெற்றுள்ளது.வெற்றிபெற்ற மாணவியர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் திரு திருநாதன் மற்றும் திருமதி சந்தன கவிதா ஆகியோர்களை பள்ளி தலைமை ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.