சனி, ௦6 டிசம்பர் 2௦25
AnandaBhaskar.com

வலங்கைமானில் 2700 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்.


anandabhaskar
anandabhaskar
Date : 26 நவம்பர் 2௦25 | Print View

வலங்கைமானில் 2700 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்.



திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், ஆவூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வீரமங்கலம், கண்டியூர், தென்குவளைவேலி உள்ளிட்ட 27 கிராம ஊராட்சிகளில் தலா 100 மரக்கன்றுகள் வீதம் 2700 மரக்கன்றுகள் நடும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகள் கிராம சாலைகளின் இரு புறங்களிலும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினை வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்திஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, ரமணி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Write your opinion

AnandaBhaskar.com

சனி, ௦6 டிசம்பர் 2௦25


வலங்கைமானில் 2700 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்.

ரிலீஸ் வயர் : 26 நவம்பர் 2௦25

featured Image



திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், ஆவூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வீரமங்கலம், கண்டியூர், தென்குவளைவேலி உள்ளிட்ட 27 கிராம ஊராட்சிகளில் தலா 100 மரக்கன்றுகள் வீதம் 2700 மரக்கன்றுகள் நடும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகள் கிராம சாலைகளின் இரு புறங்களிலும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினை வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்திஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, ரமணி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com