தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P. கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நேற்று (04.12.2025) திருக்கார்த்திகை முன்னிட்டு காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலை சுவாமி பிரகார புறப்பாடும் மற்றும் சொக்கப்பாணை தீபம் ஏற்றுதலும் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள் மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர். செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*